பாஜக பிரமுகர் வீட்டில் 400 சவரன் நகைகள் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள், கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை அடுத்து காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்னேரியை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய குழு உறுப்பினர் ஜானகிராமன் வீடு உள்ளது. இவர் உறவினர் இல்ல திருமண ஏற்பாட்டிற்காக சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்தநிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து உடனடியாக தனது வீட்டிற்கு சென்ற ஜானகிராமன், திருமண ஏற்பாட்டிற்காக வைத்திருந்த சுமார் 400 சவரன் நகைகள் கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனைத்தொடர்ந்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஜானகிராமன் புகார் அளித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 3 தனிப்படை அமைத்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version