மயிலாப்பூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து 4.47 லட்சம் கொள்ளை

சென்னை மயிலாப்பூரில் நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 4 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாப்பூர் தேவாலயம் சாலையில் உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான மருத்து கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 4 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கடையை திறக்க வந்த தியாகராஜன் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அருகில் உள்ள பழக் கடை மற்றும் மளிகை கடையின் பூட்டை உடைத்து 45 ஆயிரம் ரூபாய் கொள்ளையைடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version