வீடு , நகைகடையில் 3 கிலோ தங்கம் கொள்ளை ..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக்கடையில் 3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை காவல்துறைனர் தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜயன், நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு விஜயன் குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், பூஜை அறையில் இருந்த 57 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளான்.

அங்கிருந்த நகைக்கடை சாவிகளையும் எடுத்துச் சென்ற கொள்ளையன், மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடையை திறந்து, 3 கிலோ மதிப்பிலான நகைகளை கொள்ளயடித்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் விஜயன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நகைக்கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து முகமூடி அணிந்த கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version