விடுதியில் அறை எடுத்து தங்கிய தம்பதியிடம் 30 சவரன் தங்க நகை கொள்ளை

மதுரை தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியிடம், 30 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ருபாய் பணம் மற்றும் மடிக்கணினி திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னையை சேர்ந்த பரமசிவன், சரஸ்வதி தம்பதியினர் மதுரை மாவட்டம், பரவை அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் பரமசிவன் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த மர்மநபர்கள், 30 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ருபாய் பணம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்றனர்.

கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Exit mobile version