3 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை

3 சவரன் நகைக்காக முதாட்டியை படுகொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கெட்டிமன்னன் புதூரை சேர்ந்தவர் பொன்னுத்தாய். கடந்த 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்ற பொன்னுத்தாய் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஆளில்லாத தொழிற்சாலையில் கை கால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பொன்னுத்தாய் பிணமாக கிடந்தார். இதையடுத்து பொன்னுத்தாயை வேலைக்கு அழைத்துச்சென்ற ராமாத்தாள் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 3 சவரன் நகைக்காக பொன்னுத்தாயை ராமாத்தாள் கொலை செய்தது தெரிய வந்தது. கடன் காரணமாக இந்த செயலை செய்து விட்டதாக போலிசாரிடம் ராமாத்தாள் கூறியுள்ளார்.

Exit mobile version