விளையாட்டு வீரர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் வீரர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுகுறித்து பரிந்துரை அளிக்க உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த உள் ஒதுக்கீடு மூலம் அரசுப் பணியில் சேரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version