விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உள் இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு, விளையாட்டு வீரர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதமாக உயர்த்தி உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version