திறமையான தமிழக விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம் – பொதுச்செயலாளர் ஒலிம்பிக் தின வாழ்த்து!

உலக அளவில் இன்றைக்கு ஒலிம்பிக் தினமானது சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒலிம்பிக் தின வாழ்த்தினை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தெரிவித்தார். அவரது டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் முதுமொழிக்கேற்ப அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து,சமூகத்தின் முழுமையான வளர்ச்சி விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமையை ஊக்குவப்பதில் தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படும், சிறப்பு வாய்ந்த இந்த உலக ஒலிம்பிக் தினத்தில்
தமிழகத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை மென்மேலும் உருவாக்கி பதக்கங்களை வென்று, சர்வதேச அளவில் இந்திய திருநாட்டின் பெருமையை பறைசாற்றி தலைநிமிர செய்வோம்.

Exit mobile version