மெரினாவில் அதிகாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 பேர் கைது

சென்னை மெரினாவில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 பேரை விரட்டிப் பிடித்த போலீசார் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்

சென்னையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் 29 வாகன தடுப்புகளை வைத்து 130 காவலர்கள் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை மூன்று மணி அளவில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்ட நிலையில், 21 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பெற்றோரை அழைத்து வரும்படி அவர்களிடம் அறிவுறுத்திய போலீசார், பைக் ரேசில் ஈடுபட்டவர்களின் வாகன உரிமத்தை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version