கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை

ஊத்தங்கரையில் அரசு தலைமை மருத்துவ அதிகாரி வீட்டில் இருந்து 200 சவரன் நகை மற்றும் 6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பினார். வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 200 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version