ஒரேநாளில் தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையால் கைது

ஒரேநாளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஜெகதாபட்டிணத்திலிருந்து நேற்று காலை 136 விசைப்படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர், 2 படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் 3 மீனவர்களை சிறை பிடித்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் நாளை மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டியதாக நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர் 8 பேர் இன்னும் நாடு திரும்பாத நிலையில், மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் விசைப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version