லக்காபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மொடக்குறிச்சி அண்ணா புதுக்காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராமசாமி என்பவர், தனது மனைவியுடன் வங்கியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கும் போது, இரண்டு இருசக்கரவாகனத்தில் வந்த முன்று பேர், அவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ராமசாமி கூச்சலிடவே, ஒருவர் தப்பி ஓடி தலைமறைவானார். மற்ற 2 பேரை பிடித்து பொது மக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version