காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகேர்னாக் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சுமார் 12 மணிநேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் வனப்பகுதியில் வேறு யாரெனும் மறைந்திருக்கிறார்களா? என்றும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இதனிடையே இந்த துப்பாக்கிச் சண்டையினால் கோகேர்னாக் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Exit mobile version