2 நாள் பயணமாக கோவை வருகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

இரண்டு நாள் பயணமாக ,குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று கோவை வருகிறார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் 90-ஆவது ஆண்டு கொண்டாட்டம் அவினாசியில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனி விமானம் மூலமாக பெங்களூருவில் இருந்து கோவைக்கு வருகிறார்.

மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் வைரவிழாவில் நாளை அவர் கலந்து கொள்கிறார்.

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நாளை மாலை நடைபெறும் 34-ஆவது பட்டமளிப்பு விழாவிலும் வெங்கய்யா நாயுடு பங்கேற்கிறார்.

குடியரசு துணைத் தலைவரின் வருகையை ஒட்டி கோவை, பொள்ளாச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version