அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களின் மனைவி மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்!

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களின் மனைவி, உடல்நலக்குறைவால் காலமானார். அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொந்த ஊரான நாகை மாவட்டம் ஓரடியம்புலத்தில் அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் அமைச்சரின் மனைவி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளனர். மனைவியை இழந்து வாடும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version