சீக்கிய கலவரம் குறித்து கருத்து கூறிய சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிட்ரோடா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்ற அப்போதைய பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா, 1984-ல் நடந்தது குறித்து பா.ஜ.வுக்கு இப்போது என்ன கவலை என்றும் 1984-ல் நடந்தது, அதற்கு தற்போது என்ன என்றும் அலட்சியமாக பதிலளித்தார். அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டதற்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version