விடுதலை புலிகளின் புதையலை தோண்டியெடுக்க முயன்ற 14 பேர் கைது

இலங்கையின் புதுக் குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட புதையல் பொருட்கள் இருப்பதாக கூறி, அதனை தோண்டியெடுக்க முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக் குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலை புலிகளுக்கு சொந்தமான புதையல் இருப்பதாகக் கூறி, நிலத்தை தோண்டி எடுக்க சிலர் முயற்சி செய்தனர். இதுகுறித்து புது குடியிருப்பு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த 14 பேரை கைது செய்தனர்.

அவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, தம்புள்ள, மாத்தளை, சாவகச்சேரி, கலேவெல போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து சொகுசு கார், ஸ்கேனர் கேமராக்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version