கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.123 கோடி நிவாரணநிதி -தஞ்சை மாவட்ட ஆட்சியர்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை 123 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் அடிப்படையில், புயலின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் 1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதேபோல், வீடுகள் இழந்து தவித்து வந்த 16 ஆயிரத்து 421 குடும்பங்களுக்கு 63 கோடியும், உயிரிழந்த கால்நடைகளுக்காக 14 லட்சம் என மொத்தம், 123 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version