கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி

கஜா புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக கூறிய அவர், நாகையில் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version