ஸ்டாலின் கனவு பலிக்காது!

அதிமுகவை அழிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அக்டோபர் 4ம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க.தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஆலோசனை வழங்க தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வருகை தர உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டம் மதுரை சிந்தாமணி வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது எனவும்,
தெரிவித்தார்.

மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உயிரோடு இருக்கும் பொழுதே அ.தி.மு.க. அழிக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார் என்றும், இப்போது ஸ்டாலின் அதிமுகவிற்குள் சண்டையை மூட்டி விட்டு அ.தி.மு.க.வை அழிக்கலாம், ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார் என்றும் தெரிவித்த செல்லூர் ராஜு, அது எப்போதும் நடக்காது என்றார். 

Exit mobile version