மதுரையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது – அமைச்சர்

மதுரையில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை துரைசாமி நகர், வேல்முருகன் நகர் ஆகிய பகுதியில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்ததன் காரணமாக, மதுரையில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை வராது எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பும் குறைகள் அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Exit mobile version