உலகெங்கும் உள்ள தமிழர்களின் பெயரை கெடுத்தவர் ஆ.ராசா: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜீ-பூம்பா என்று சொல்வதுபோல முதலமைச்சராகி விட வேண்டுமென ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருப்பதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை வைகை ஆற்றில், ஏவி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து, தெப்பக்குளத்திள்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களையும், மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளதையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மும்மாரி மழை பெய்து வருவதாக பெருமிதத்துடன் கூறினார். எதற்காவது போராட்டம் நடத்திக்கொண்டே இருக்க வேண்டுமென ஸ்டாலின் நினைப்பதாக குற்றம்சாட்டினார். தமிழர்களின் பெயரை கெடுத்தவர் ஆ.ராசா என்று காட்டமாக கூறிய அவர், அதிமுகவை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை என்றும் விமர்சித்தார்.

Exit mobile version