"வீடு புகுந்து வெட்டிக்கொலை"

திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி, 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட ராமு. செங்கல் சேம்பர் தொழில் செய்து வரும் இவரது சகோதரர் தங்கராஜ் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக தங்கராஜை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்தநிலையில், ராமுவின் வீட்டிற்குள் இன்று காலை நுழைந்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி, வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், மேல்மணம்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version