விநாயகர் சிலை ஊர்வலத்தில் பதற்றம் – நிலைமையை திறமையாக கையாண்ட போலீசார்!

திண்டுக்கல் அருகே கொடை பாறைப்பட்டி என்ற ஊர் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.  பின்னர் சிலையை கரைக்க கொண்டு செல்லும் பாதையில் பிரச்னை இருந்து வருகிறது.

இன்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் பேகம்பூர் பள்ளிவாசல் அருகே வந்த போது ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், அப்பகுதியினருக்கும் இடையே  மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

திறமையாக செயல்பட்ட காவல்துறையினர், இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தி அமைதியை நிலை நாட்டினர்.  இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது. டிஐஜி நிர்மல் குமார் ஜோஷி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Exit mobile version