மோடி தலைமையை கண்டு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடுக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தீவிரவாதத்திற்கு எதிராக சிம்மசொப்பனமாக விளங்கும் மோடி தலைமையை கண்டு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடுக்கம் கண்டிருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மதசார்பின்மைக்கு ஆபத்து என்று கூறுவது அரசியல் பச்சோந்தி தனம் என்று விமர்சித்த துணை முதலமைச்சர், சிறுபான்மையினரை என்றும் பாதுகாத்து வரும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version