மு.க.அழகிரி அடுத்த அதிரடி- திமுக அதிர்ச்சி

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி பரிசீலிப்பதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே காட்டுரில், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில் மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, கருணாநிதியின் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது பற்றி பார்க்கலாம் என்றும், தன்னுடைய ஆதவாளர்களிடம் ஆலோசித்த பிறகு திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version