முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக, தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, முல்லை பெரியாறு அணையின் 18ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை இன்று காலை திறந்து விட்டார். வினாடிக்கு 279 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 18ம் கால்வாயினை, கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் முடிவுற்றதை அடுத்து, கால்வாய் நீட்டிப்பு திட்ட பகுதிகளுக்கு, சோதனை ஓட்ட அடிப்படையில் 7 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version