12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில், 12 மாதங்களுக்கு பிறகு மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, அமைக்கப்பட்ட மூவர் குழு ஆண்டுதோறும் அணையை பார்வையிட்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. 5 பேர் கொண்ட துணைக் குழுவும் 3 மாதத்திற்கு ஒருமுறை அணையின் நீர்மட்டம், இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர், முல்லைப் பெரியாறு அணையில், 14
வது முறையாக ஆய்வு மேற்கொண்டனர்.பேபி அணை, மதகுகளின் இயக்கம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த மூவர் குழு, தமிழக மற்றும் கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அப்போது, அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் வகையில், பேபி அணையை பலப்படுத்தவும், மேல் தேக்கடி ஏரியில் உள்ள தமிழ் அன்னை படகை இயக்க அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

Exit mobile version