மல்லையா விவகாரம்- காங்கிரஸ் புது குண்டு

மல்லையாவும், ஜேட்லியும் 20 நிமிடங்கள் உட்கார்ந்து பேசியதை சிசிடிவி காட்சி மூலம் உறுதிபடுத்திக் கொள்ளலாம் என காங்கிரஸ் எம்.பி.
புனியா தெரிவித்துள்ளார்

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அருண் ஜேட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறினார். ஆனால், அருண் ஜேட்லி இதனை மறுத்திருந்தார்.

ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நாடாளுமன்ற மத்திய ஹாலில், அருண் ஜேட்லியும், மல்லையாவும் 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாக காங்கிரஸ் எம்.பி புனியா தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் எது உண்மை என தெரியவரும் எனவும் புனியா கூறியுள்ளார்.

Exit mobile version