காலியாகும் காங்கிரஸ் கூடாரம்! குலாம் நபி ஆசாதைத் தொடர்ந்து காங்கிரசிலிருந்து விலகும் தலைவர்கள்!

குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரசிலிருந்து மேலும் 20 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளது, காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடும் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகியது, தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் 20 பேர் நேற்று கட்சியில் இருந்து விலகினர்.

Exit mobile version