மதுரையில் 13 -வது புத்தக திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தில், புத்தகத் திருவிழாவை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். வரும் 10ஆம் தேதி வரை 11 நாள்கள் புத்தக திருவிழா நடைபெறுகிறது. தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 250 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, பொது அறிவு, தமிழ் அறிஞர்களின் நாவல்கள், தமிழர்களின் வரலாறு கூறும் புத்தகங்கள் என சுமார் 2 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Exit mobile version