ஸ்டாலின் தோல்வி பயத்தில் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்: ஆர்.பி. உதயகுமார்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்ப சுற்றுலா சென்றுள்ளார் என்றும் 22 தொகுதிகளில் தோல்வி பெறுவோம் என்பது தெரிந்து சென்றுள்ளார் என விமர்சித்தார். திமுகவின் பொய்யான பிரசாரங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version