பொய் சொல்வதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைக்கக் கூடியவர்கள்…

பொய் சொல்வதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைக்கக் கூடியவர்கள் என வருவாத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். வேலூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து, ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது, அக்ரஹாரம், தோளப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த அமமுகவினர், அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது, தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version