பொதுமக்களுக்கு 40; அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி- ராகுல் ட்வீட்

 

பொதுமக்களுக்கு 40 ரூபாய் வழங்கி விட்டு அம்பானிக்கு மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி வழங்குவதா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் . “இந்தியாவின் காவலாளி அரசு கருவூலத்தை எப்போது திறப்பார்? என கேட்டுள்ளார்.ரஃபேல் ஊழலில் அனில் அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் 50 கோடி இந்திய மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.2,000 கோடி வழங்குகிறார் என தெரிவித்துள்ளார். அதாவது 5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறும் போது ,அத்திட்டத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு வெறும் 40 ரூபாய் தான் பிரதமர் செலவழிக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த செய்தி உங்களுடைய விளம்பரம், சிறப்பு மோடி அவர்களே” என்று ராகுல் டிவிட் செய்துள்ளார்.

Exit mobile version