மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டார் இராகுல் – தடுக்க ஏராளமான உ.பி. போலிஸ் குவிப்பு

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஹத்ராஸ் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் இருவரையும் தடுத்து நிறுத்தியதுடன், கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தடையை மீறி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் 200 தொண்டர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இன்று மீண்டும் ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். இதனை காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Exit mobile version