பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா?

இலங்கை இறுதிப்போர் குறித்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவே உண்மையை கூறிவிட்டதாகவும், பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில், பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்த வேண்டம் என கேட்டுக்கொண்டார்.

அவர்கள் 7 பேரின் இந்த நிலைக்கு காங்கிரசும், திமுகவும் தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். குற்றவாளிகளை விடுவிக்கக்கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதி போர் குறித்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவே உண்மையை கூறிய நிலையில், பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version