கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்!

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செலுத்திக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 47ஆயிரத்து 342 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய குழுவின் அறிவுறுத்தல்படி, பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளையும், முன்களப் பணியாளர்களாக பதிவு செய்யும் பணி தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 

Exit mobile version