தேசிய தடுப்பூசி தினம் இன்று…!

தேசிய தடுப்பூசி தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் இதனை நோய்த் தடுப்பு தினம் என்று அழைக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை போலியோவினால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். அதனை தடுக்கும்பொருட்டு பிறந்த குழந்தைகளுக்கு போலியோ வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இதனை இந்தியாவில் முதன்முறையாக 1995 ஆம் ஆண்டு மார்ச் 16ல் வழங்கினார்கள். அதனை நினைவுபடுத்தும் விதமாகவும் உலகில் உள்ள போலியோவை முற்றிலும் அழிக்கும் விதமாகவும் இந்த தினமான கொண்டாடப்படுகிறது.

Exit mobile version