பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்

 

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீது அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா என்பவர் ,பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார். 2009-ம் ஆண்டு, லாஸ் வேகாஸில் உள்ள விடுதியில் இச்சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியே எதுவும் பேசக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணுக்கு ரொனால்டோ, 2கோடியே 72 லட்சம் அளித்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஜெர்மனிப் பத்திரிகையான டெர் ஸ்பீகலில் வெளியாகி உள்ளது . இதையடுத்து ஜெர்மனிப் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரொனால்டோவின் சட்ட நிபுணர் குழு கூறியுள்ளது.

Exit mobile version