பந்த் முழு வெற்றி – திருநாவுக்கரசர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,16 கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து ஊர்வலமாகச் சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மிகப்பெரிய எதிர்ப்பினை பதிவு செய்ததாக அவர் கூறினார். இந்த பந்த்தின் வெற்றி, மோடி அரசிற்கு வீழ்வதற்கு அஸ்திவாரமாக அமையப் போவதாக அவர் தெரிவித்தார். அரசு பேருந்துகள் இயங்கினாலும், தனியார் வாகனங்கள், கடைகள், நிறுவனங்கள் ஆதரவு தந்ததாக அவர் கூறினார். மத்திய அரசு தொடர்ந்து விலையேற்றத்தை அனுமதிப்பது கண்டனத்திற்குரியது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Exit mobile version