நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளை மற்றும் வரும் 23ஆம் தேதிகளிலும், அக்டோபர் 7 மற்றும் 14ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. tn.election.gov.in என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கும் முறையும் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version