தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, கள்ளக்குறிச்சி, வடசென்னை, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில் கட்சியை வழி நடத்துவது, அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், முக்கிய முடிவேடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version