சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு

4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தேமுதிகவினர் அயராது பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த 4 தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் விஜயகாந்த், சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என தேமுதிகவினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version