அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என பலரும் தீவிர வாக்கு சேரிகப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதிமுக மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, விக்கிரவாண்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய விஜயகாந்த், வாக்காளர்கள் அதிமுகவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். பிரசாரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் உடனிருந்தார்.

Exit mobile version