தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

திருச்செந்தூரை அடுத்த செந்தூர் நகரை சேர்ந்த முருகன் மற்றும் ஜோதி தம்பதி, அரசு அளித்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களின் வீட்டு மனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ஜோதி, பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள், ஜோதியை தடுத்தனர். இந்த சம்பவத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Exit mobile version