திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி..? – நடிகர் விஷால்

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷாலின் நடித்துள்ள சண்டக்கோழி 2ஆம் பாகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திரைப்படம் விஷாலின் 25வது படமாகும்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஷால், திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகே, ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கருணாஸ் கைது நடவடிக்கையை, சட்டத்துக்கு உட்பட்ட ஒன்றாக தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். அதேவேளையில், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றிய கேள்விக்கு, தனது மனநிலையும் அதே கேள்வியை கேட்பதாக விஷால் குறிப்பிட்டார்.

Exit mobile version