மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மீண்டும் பராமரிப்பு பணி !

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சி மேப்பலம் பகுதியில் ஓஎன்ஜிசி சார்பில் கடந்தாண்டு புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க நடந்த முயற்சிகள் விவசாயிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகளில் மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதை கண்டித்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் எண்ணெய் கிணறுகள் செயல்பட்டால் விவசாயம் கேள்விக்குறியாகும் என்றும் மாவட்ட நிர்வாகம் எண்ணெய் கிணறுகளை மொத்தமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Exit mobile version