திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என  இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.  கனமழை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை ஒத்திவைக்க தலைமைச்
செயலாளரிடமிருந்து கடிதம் வந்ததாக ஒபி ராவ் கூறியுள்ளார். இதனால், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

Exit mobile version