தற்கொலைக்கு முயன்ற அபிராமி

குழந்தையை படுகொலை செய்த வழக்கில், சிறையில் உள்ள அபிராமி தற்கொலை முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு, கள்ளக்காதல் வலையில் விழுந்து, அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட குன்றத்தூர் அபிராமி, தனது 2 குழந்தைகளையும் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அபிராமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவமானத்தால், மன உளைச்சலுடன் காணப்பட்ட அபிராமி, புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயன்றுள்ளார்.

இதனையடுத்து, மற்ற கைதிகள், அவரை மீட்டு, சிறை வளாகத்தில் உள்ள மருததுவமனையில் அனுமதித்தனர். அங்கு அபிராமிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version