தற்கொலை ஏன்? மனைவியின் படத்தை முகநூலில் போட மறுத்த தமிழன் பிரசன்னா

சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா.இவர் வழக்கறிஞராகவும்,திமுகவில் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.தமிழன் பிரச்சன்னாவுக்கு நதியா(35) என்ற மனைவியும்,3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று வீட்டில் நதியாவின் அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் கணவர் தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.உடனே நதியாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் மகளின் இறப்பு தொடர்பாக நதியாவின் தந்தையான ரவி கொடுங்கையூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை

அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரான தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்திய போது “எனது மனைவி நதியாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடி பிரசன்னாவின் முகநூலில் பதிவிட வேண்டுமென கேட்டு கொண்டதாகவும்,அதற்கு கொரோனா காலம் என்பதாலும் , பெண்களின் புகைப்படம் என்பதால் முகநூலில் புகைப்படத்தை போட மறுத்ததாகவும் , அடுத்த ஆண்டு சிறப்பாக கொண்டாடலாம் என மனைவியிடம் தெரிவித்தேன்.

இதனால் கோபமடைந்த நதியா தன்னிடம் சண்டை போட்டு கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்து வந்தார். இன்று காலை 10 மணியளவில் எழுந்து பார்த்த போது அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.இதுதான் காரணமா வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version